Thursday, December 19, 2013

பிரம்மம் ஒக்கட்டே (அத்வைதம் –Advaitha)

பிரம்மம் தவிர வேறில்லை (அத்வைதம் –Advaitha)
அத்வைதம் (அத்துவைதம்):
இது ‘பிரம்மம் அன்றி வேறில்லை’ என்ற கொள்கையை சிந்தாந்தமாகக் கொண்ட வேதாந்த மதம்.

பிரம்மம், அவித்தை என இரண்டு நிலை.
அவற்றுள், பிரம்மம் என்பது சத்தியம், ஞானநந்தாத்மகம், நிர்விகாரம், நிர்வயம், நித்தியம், நிர்த்தோஷம், விபு என ஏழு லக்ஷணங்களை உடையது.
அவித்தை என்பது அபாரமார்த்திகம், சதசத்துவிலக்ஷணம், சடம், சவிகாரம், சாவயனம், அநாதிசாந்தம், அஞ்ஞானரூபம் என ஏழு லக்ஷணங்களை உடையது.

பஞ்சபூதங்கள் அவித்தையுடைய காரியங்கள். அவற்றின்றும் திரிகுண கலவையாகி சத்துவ குணத்தின் கூறாகிய ஞானேந்திரியம் ஐந்தும் அந்தக்கரணம் நான்கும் உண்டாகின்றன. ரசசால் கன்மேந்திரியங்கள் ஐந்தும் பிராணன் ஐந்தும் உண்டாகின்றன. இவையெல்லாம் சூக்குமதேக காரணம். தமோ குணத்தின் கூறாகிய அபஞ்சீகிருத பூதங்களினாலே பஞ்சீகிருத பூதங்கள் உண்டாம். இவையே ஸ்தூல தேகமாம். பிரபஞ்ச நாசம் பிரளயம் எனப்படும்.

மோக்ஷ சாதனம் எனப்படுவது ‘நித்தியா நித்திய வஸ்து விவேகம் விஷயபல வைராக்கியம் முமூட்சுதுவம்’  என்பன. இவற்றால் ‘பிரம்மம் தவிர வேறில்லை’ என காண்பது மோக்ஷம்.
அத்துவைதாநந்தன்
வேதாந்த நூலுக்கு வியாக்கியானம் செய்தவர். இவர் சதாநந்தருக்கு குரு.

 அத்வைதம் -விளக்கம்;
அத்வைதம் = அ+துவைதம் (துவைதம் என்றால் இரண்டு எனப்படும். அதாவது பரமாத்மா (பிரம்மம்), ஜீவாத்மா (உயிர்களில் இருக்கும் ஆத்மா).
ஆனால், அத்வைதம் என்றால் ‘இரண்டல்ல, ஒன்றே எனப்பொருள். அந்த ஒன்றானது பரமாத்மா எனப்படும் பிரம்மம்.

ஸ்ரீவெங்கடாசலபதியை மனதுருகிப் பாடிய ஸ்ரீஅன்னமாச்சார்யாவும்,  ‘பிரம்மம் ஒக்கட்டே, பரப்பிரம்மம் ஒக்கட்டே’ என்றே பாடியுள்ளார்.

No comments:

Post a Comment