Friday, December 20, 2013

எது பொய்ப்பினும் ஆரிஷம் பொய்த்ததில்லை.

எது பொய்ப்பினும் ஆரிஷம் பொய்த்ததில்லை.
ரிஷிகள்:
ரிஷி என்பதன் பொருள் ‘சத்தியதரிசி’.
ரிஷிகளில்: பிரம்மரிஷி, தேவரிஷி, மகாரிஷி, பரமரிஷி, காண்டரிஷி, சுருதரிஷி, ராஜரிஷி, என ஏழுவகை ரிஷிகள் உள்ளனர்.
வசிஷ்டர்     = இவர் ஒரு பிரம்மரிஷி,
நாரதர்     = இவர் ஒரு தேவரிஷி,
வியாசர்   = இவர் ஒரு மகாரிஷி.
எக்கருவிகொண்டும், எத்துணை சிறந்த மதியூகிகளுக்கும் காண்பதற்கும் உணர்வதற்கும் அரியனவான, ‘மாயா சொரூபமாய் தூல நிலை முதல் சூக்கும நிலைவரை விரிந்து கிடக்கும் சராசரங்களின் தத்துவ சொரூபங்களை யெல்லாம்’ உள்ளவாறு கண்டவர்களும், அவைகளை உலகுக்கு வெளியிடவர்களும், இந்த மகா ரிஷிகளே ஆவார்கள்.
ரிஷிகள் வாக்கு ஆரிஷமெனப்படும். எது பொய்ப்பினும் ஆரிஷம் பொய்த்ததில்லை.


No comments:

Post a Comment