Friday, December 20, 2013

நானுமறியேன், அவளும் பொய்சொல்லாள்!

நானுறியேன், அவளும் பொய்சொல்லாள்!


இரட்டைப் புலவர்கள். இருவரும் சகோதரர்கள்.
இவர்களில் ஒருவர் அந்தகராகவும் (கண்தெரியாதவர்), மற்றவர் முடவராகவும் பிறந்த சகோதரர்கள். கவிப் புலமை மிக்கவர்கள். 
இவர்கள் காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழில் மிக்க வல்லவராகி, முடவரை, அந்தகர் (குருடர்) தோள்மீது ஏற்றிக் கொண்டு, முடவர் வழிகாட்ட ஊர்காடோறுஞ் சென்று கவிபாடி பெருங்கீர்த்தி பெற்றவர்கள். இவர்கள் செய்த நூல்கள் தைவீகவுலா முதலியன. 
இப்புலவர்களே ‘நானுமறியேன், அவளும் பொய்சொல்லாள்’ என்னும் பழமொழியை வெளிப்படுத்தி தாம் ஆராயாத விஷயங்களையும் சரஸ்வதி அருளால் செய்யுள் வாயிலாக ஆங்காங்கும் வெளியிட்டு வந்தவர்கள்.

No comments:

Post a Comment