Friday, December 20, 2013

ரிஷியசிருங்கன் (இவர் கால் பட்ட நிலமெல்லாம் மழை!)

ரிஷியசிருங்கன்: (இவர் கால் பட்ட நிலமெல்லாம் மழை)
ரிஷியசிரருங்கன் ஒரு ரிஷி. 
இவர் ‘கலைக்கோட்டு மகாரிஷி’ என தமிழில் வழங்கப்படுபவர்.
அங்கதேசத்து அரசன் தனது நாட்டில் மலையில்லாமையால் வருந்தும்போது, இந்த ரிஷியின் கால் பட்டால் நாட்டில் மழை உண்டாகுமென கேள்விப்பட்டு, சில பெண்களை அவரிடம் அனுப்பினார்.
அந்த ரிஷி, இதற்கு முன் எப்போதும் பெண்டிரை கண்டிராதவர் என்பதால், அந்த பெண்களை அதிசயித்து பார்த்தார். அந்த பெண்கள் அவர்களின் ஆசிரமத்து வரும்படி கேட்டுக் கொண்டனர். இவரும் ‘எங்கே ஆசிரமம்’ என கேட்டார். இதோ இதோ  ஆசிரமம் என்று பொய் சொல்லி அவர்களின் நாட்டுக்கே அந்த ரிஷியை அழைத்து வந்துவிட்டனர்.

உடனே நாடு முழுவதும் மழை பொழிந்தது. அந்த அரசன் தனது புத்திரியை மணக்கும்படி வேண்ட, அந்த ரிஷியும் அவ்வாறே மணந்தார். 

No comments:

Post a Comment