Friday, December 20, 2013

நரசிம்மா! வா!!

நரசிம்மா! வா!!

கசியபனுக்கு திதி வயிற்றில் பிறந்த புத்திரர் இருவர். இரணியகசிபன், இரணியாக்ஷன் என இருவர்.  
இரணியகசிபன் கொடிய தவம் செய்து பிரம்மாவிடம், ‘தன்னை தேவரும், மனிதரும், விலங்கினங்களும் அசுரரும் கொல்லாதிருக்க’ வரம் பெற்று அதனால் கர்வமுண்டாகி, தன்னையே இந்த உலகம் கடவுளாக வழிபட வேண்டுமென வகுத்து, அவ்வாறு நடக்காதவரை கொடுமைபடுத்தி வந்தான்.
ஆனால் அவன் மகன் பிரகலாதன் தனது தந்தையை பொருட்படுத்தாமல் விஷ்ணுவை வழிபட்டு வந்தான். இதுபொறுக்கமாட்டாமல், இரணியகசிபன் தனது மகன் பிரகலாதனை வாளை ஓங்கி வெட்ட எத்தனித்து, ‘நீ வழிபடும் விஷ்ணு உன்னை காப்பாற்றட்டும்’ என வெட்டினான். உடனே விஷ்ணு ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டு நரசிங்க ரூபத்தோடு தோன்றி அவனைக் கொன்று பிரகலாதனை காத்தருளினார்.

(தேவர்களோ, மனிதர்களோ, விலங்கினங்களோ கொல்ல முடியாத வரத்தை வாங்கி, அதனால் கர்வமுற்று, தன்னை யாரும் அழிக்க முடியாது என அநியாயம் செய்துவந்தவன். எனவே, இவனைக் கொல்ல இறைவன் மாற்றுவழியை உபயோகிக்கிறார். பாதி மனிதனும் பாதி விலங்கும் கொண்ட ‘நரசிம்ம அவதாரத்தை’ விஷ்ணு எடுத்து, விலங்கின் நகங்களால் இரணியகசிபனைக் குதறிக் கொன்றார். யாருமே தன்னைக் கொல்லமுடியாது என்ற அகங்காரத்தில் இருந்தவனுக்கு, கடவுள் மாற்றுவழியில் தீர்வு சொன்னார் போலும்!)

இரணியாக்ஷன்:
இரணியாக்ஷன் பூமியை பாயாகச் சுருட்டி சமுத்திரத்தில் ஒழித்துவைத்தான். அப்போது விஷ்ணு வராகமாகி அவனைக் கொன்றார்.

No comments:

Post a Comment