Saturday, January 18, 2014

பாவம் போக்கும் நதிகளின் பாவம் எங்கே போகும்?

பாவம் போக்கும் நதிகளின் பாவம் எங்கே போகும்?
நவநதிகள் என்பது ‘கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, கோதாவரி, காவிரி, பயோஷ்ணி, சரயு, குமரி, என்னும் ஒன்பதும் நவநதி எனப்படும்.
தம்மில் படிவோர் பாவமெல்லாம் தான் கவர்ந்து சுமக்கும். அவ்வாறு பாவங்கள் அதிகமாகி சுமக்க முடியாமல் போனதால் அவைகள் ஒன்று சேர்ந்து பெண்ணுருக் கொண்டு கைலை (கயிலை) சென்று, சிவனை வழிபட்டுத் தமது குறையைத் தீர்த்தருளும்படி வேண்டின.
சிவன், அந்த நதிகளை நோக்கி, ‘கும்பகோணத்திலே அக்கினி திக்கிலே ஒரு தீர்த்தமுள்ளது. வியாழன் சிங்க ராசியில் வரும்போது, மகநக்ஷத்திரத்திலே நீங்கள் அந்த தீர்த்தத்தில் சென்று படிந்து (மூழ்கி) உங்கள் பாவத்தைப் போக்கக் கடவீரென’ அநுகிரகித்தார்.
(வியாழன் என்ற குரு, சிம்மராசிக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை வரும்)

No comments:

Post a Comment