Friday, March 28, 2014

ஆன்மா எங்கு செல்லும்


இந்த ஜீவ-ஆன்மா முக்திபெற்று பேராத்மாவுடன் சேர்வதற்கு உபகாரமாக உபதேசித்த உபநிஷதங்களின் சாரமே ஸ்ரீகிருஷ்ணன் அருளிய கீதை.

உபநிஷதங்களினது உண்மையை உணரும் பக்குவம் கலியுகத்து மக்களுக்கு கைகூடாதென்பதால், கலியுகம் ஆரம்பத்தில், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்து அந்த உபநிஷதங்களின் சாரத்தை தந்தான்.
எந்த விருப்பும் வெறுப்பும் இன்றி கடமையை கடமையாகச் செய்து வந்தால் ஒருவன் ஞானியாக இருக்கலாம் என்பது கீதையின் சித்தாந்தம்.
கீதையை கேட்டு நமக்கு வெளியிட்டவர் சஞ்சயன்.
  

கீதைக்கு, ஆதிசங்கராச்சாரியார் ‘அத்வைத’ விளக்கமும், 
ஸ்ரீராமானுஜாச்சாரியார் ‘விசிஷ்டாத்வைத’ விளக்கமும், 
ஸ்ரீமத்வாச்சாரியார் ‘துவைத’ விளக்கமும் மிக விரிவாகச் செய்துள்ளனர். 


No comments:

Post a Comment