Saturday, March 29, 2014

குழவி இறப்பினும் . . .. .

சேரமான் கணைக்கால் இரும்பொறை:

இந்த மன்னனை, கோச்செங்கட் சோழனாலே சிறையிடப்பட்டான். சிறையில் சேரமான் தாகத்தால் தவித்தான். அவ்வாறு தாகம் அதிகமானபோதும், அங்கு கொடுத்த தண்ணீரை வாங்கி அருந்த மறுத்து விட்டான். உயிரே போனாலும், எதிரியிடம் தண்ணீர் அருந்த மாட்டேன் என்று வீரமாக இருந்தான்.

அரச பரம்பரையில், வயிற்றில் கருவில் இருந்த குழந்தை இறந்து பிறந்தாலும், அந்த குழந்தையை வாளால் பிளந்து, அதன் பின்னர் அந்த சிசுவை புதைப்பார்கள். இது மரபு. அவ்வளவு வீரபரம்பரையில் பிறந்த என்னை ஒரு நாய் போல சங்கிலியில் கட்டி கிடந்தாலும், என் எதிரியிடம் நீர் வாங்கி அருந்த மாட்டேன் என்று உறுதியாக இருந்து உயிரை விட்டவன் இந்து சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னன்.

இவன் அவ்வாறு இறக்கும் தருவாயில், "குழவி இறப்பினும் மூன்றடி பிறப்பினும், ஆள் என்று வாளினால் பிளப்பர்.. .. . . தாம் இரந்து உண்ணும் புத்திரரை அரசர் விரும்பார்" என்ற கருத்துடைய பாடலை அவர் இறக்கும்போது பாடி இறந்தார்.

(புறநானூறு பாடல்)

No comments:

Post a Comment