Tuesday, April 8, 2014

உயிர்களின் அறிவுகள் ஐந்து

1. ஓர் அறிவு உயிர் = புல், மரம் முதலியன. இவைகள் தனது உடம்பால் தொடுதலை (பரிசத்தை) அறியும் அறிவுடையது.
2. ஈரறிவு உயிர் = முரள், நந்து முதலியன; இவை தொடு உணர்ச்சியுடன், நாக்கால் (நாவால்) சுவையும் அறியும். (முரள் என்பது = அட்டை).
3. மூவறிவு உயிர் = கறையான், எறும்பு முதலியன; இவை மேற்கண்ட இரண்டு அறிவோடு, மூக்கினால் சுவையைநும் அறியும்.
4. நாலறிவு உயிர் = தும்பி, வண்டு முதலியன; இவை மேற்சொன்ன மூன்று அறிவுடன், கண்ணால் உருவத்தையும் அறியும்.
5. ஐயறிவு உயிர் = வானவர், மனிதர், நரகர், விலங்கு, புள்ளு; இவர் மேற்சொன்ன நான்கு அறிவோடு, செவியினால் ஒலியையும் அறிவர். இவர்களுக்கு மனதினால் அறிவும் சிறப்பான அறிவும் உண்டு.



No comments:

Post a Comment