Saturday, April 12, 2014

அப்சரஸ் அழகிகள்

அப்சரஸ் அழகிகள்
இவர்கள் தேவகணங்கள். (தேவ உலகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்).
அப்சரஸ் பெண்கள்:
1. மேனகை
2. ரம்பை
3. கிருதாசி (ஊர்வசி)
4. திலோத்தமை
இந்த அப்சரஸ்கள் பாற்கடலில் பிறந்தவர்கள்.  கசியபன் புத்திரிகள் என்றும் சொல்லுவார்கள். இவர்களை கந்தருவ பெண்கள் என்றும் சொல்வார்கள்.
இவர்கள் 14 வகைப்படுவர்.

மேனகை
விசுவாமித்திரன் தவத்தை அழிக்குமாறு இந்திரன் இவளை ஏவிவிட, அவளும் விசுவாமித்திரரிடம் சென்று, அவரின் தவத்தைக் கலைத்து அவருடன் கூடி 'சகுந்தலை' என்ற பெண்ணைப் பெற்றாள்.

ரம்பை
இந்திரன் சபையில் ஆடும் அப்சரப் பெண். இவள் மகா அழகி. இவள் நளகூபரன் மனைவி.

ஊர்வசி
நர-நாராயணர்கள் பதரிகா ஆசிரமத்தில் தவம் செய்யும்போது, அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்து தேவதாசிகள் சென்று எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
நாராயணன் கோபம் கொண்டு இந்த தேவதாசிகளின் அழகைக் குறைக்க நினைத்து, அவர்களைக் காட்டிலும் பலமடக்கு அழகுள்ள இந்த ஊர்வசியை தனது தொடையிலிருந்து தோற்றுவித்தார். அதைப் பார்த்த அந்த தேவதாசிகள் தங்கள் அழகு, இவள்முன் குறைந்துவிட்டதாக கருதி ஓடிவிட்டனர். தொடையில் பிறந்ததாள் இவளை ஊர்வசி என்றனர்.

திலோத்தமை:

பிரம்மா ஏனையப் பெண்களைச் சிருஷ்டிசெய்து கொண்டிருக்கும்போது, இந்த பெண்ணை சிருஷ்டிக்க நினைத்து அதற்காக திலப் என்னும் பிராமணம் (உறுதி) எடுத்து சிருஷ்டித்ததால் இவளுக்கு திலோத்தமை என்ற பெயர் வந்ததாம். திலோத்தமை பாற்கடலில் பிறந்தவள். 

No comments:

Post a Comment