Thursday, April 3, 2014

விதுரன்

விதுரன்

திருதராஷ்டிரனின் மந்திரி விதுரன். (திருதராஷ்டிரனுக்கு விதுரன் தம்பியும் கூட). அம்பிகையினது தோழியினிடத்து வியாசருக்குப் பிறந்த புத்திரன். இவன் மாண்வியர் சாபத்தால் சூத்திரனாக பிறந்த யமன். இவன் மகா தரும சீலன். திருதராஷ்டிரன் பாண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்தபோது, அது கூடாது என்று வாதாடியவன். திருதராஷ்டிரன் செய்த வஞ்சனைகளை எல்லாம் பாண்டவர்களுக்கு உணர்த்தி அவர்களை அவ்வப்போது தப்பிக்க உதவியவனும், அரக்கு மாளிகையை தீவைத்து பாண்டவர்களை அழிக்க எத்தனித்தபோது, இந்த விதுரனே அங்கு இரகசியமாக சென்று பாண்டவர்கள் தப்பிக்க உதவினான்.

இவன் யவன பாஷையிலும் வல்லவன்.  உதிஷ்ரிரனும் யவன பாஷையில் வல்லவன். ஆதலால், திருதராஷ்டிரன் சபையில் நடந்த ரகசியங்களை எல்லாம் இந்த விதுரன் யவன பாஷையில், வேறு யாரும் அறியமுடியாதபடி, உதிஷ்டிரனுக்கு வாய்மோழியாகவும், எழுத்து மூலமும் தெரிவித்து உதவி உள்ளான்.


No comments:

Post a Comment