Friday, April 18, 2014

சதுர் யுகங்கள்

யுகங்கள் நான்கு (சதுர் யுகம்)
1. கிருத யுகம் = 17,28,000
2. திரேத யுகம் = 12,96,000
3. துவாபர யுகம் = 8,64,000
4. கலி யுகம் = 4,32,000
இவை மொத்தம்  43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.

ஒரு சதுர் யுகம் (43,20,000 மனித வருடங்கள்) கழிந்தால் பிரம்மனுக்கு ஒரு பகல். அதே கால அளவு ஒரு இரவு. இப்படியாக 360 பகல் இரவு காலங்கள் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒரு வருடம்.

இவ்வாறு நூறு வருடங்கள் சென்றால் பிரம்மாவின் ஆயுள் முடியும்.

இதில் முற்பகுதி 50 வருடம் பாத்தும கற்பம் என்று பெயர். பிற்பகுதி 50 வருடத்திற்கு வராக கற்பம் என்று பெயர்.

இப்போது நடந்து கொண்டிருப்பது வராக கற்பம்.

பிரம்மாவுக்கு ஒரு பகலில் 15 மனுக்கள் அரசு செய்வார்கள். அந்த மனு அந்தரம் ஒன்றில் தேவேந்திரன், சப்தரிஷிகள், முதலியோர் பிறப்பார்கள்.

பிரமாவுக்கு இரவு வரும்போது பிரளயம் உண்டாகும். இந்த பிரளயத்தில் மூன்று உலகங்களும் அழிந்துவிட்டு, மகர் உலகத்தில் உள்ளவர் புதிதாகப் பிறப்பார்கள்.



No comments:

Post a Comment