Wednesday, April 2, 2014

சௌந்தர்ய லகரி


சௌந்தர்யலகரி
சங்கராச்சிரியாரும், ஸ்ரீகண்டர் என்னும் நீலகண்டாசாரியரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒருமுறை இருவரும் சந்தித்துக் கொண்டபோது, ஸ்ரீகண்டர், சங்கராச்சாரியாரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாது மயங்கி நரசிங்க மூர்த்தியை தியானித்தாராம். உடனே நரசிங்கமூர்த்தி வெளிப்பட்டு ஸ்ரீகண்டரை தண்டிக்க முயன்றாராம்.

உடனே ஸ்ரீகண்டர் என்னும் நீலகண்டாச்சாரியர் பரமசிவனை தியானித்தாராம். அப்போது பரமசிவன் தோன்றி நரசிங்கத்தை கிழித்தெரிந்தாராம்.

உடனே சங்கராச்சாரியர், ஸ்ரீகண்டரை வணங்கி அவரிடம் சிவ தீட்சை பெற்றுக் கொண்டாராம்.

அதன் பின்னரே, சங்கராச்சாரியர், 'சிவானந்த லகரி, சௌந்தர்ய லகரி முதலியவற்றை இயற்றினாராம்.


No comments:

Post a Comment