Saturday, June 21, 2014

விரவாடும் பெருமானை...


கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல்ஏந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
--திருநாவுக்கரசு நாயனார் தேவராம்:

கரவு = வஞ்சனை
ஆடும் = பொருந்திய
வன்னெஞ்சர் = கொடிய மனத்தை உடையவர்.
அரியான் = அடையமுடியாதவர்.
கரவார்பால் = வஞ்சகம் இல்லாதவனிடத்து.
விரவாடும் = கலந்திருக்கும்.
விடை = இடபம்.
வித்தகன் = அறிஞர்.
அரவு = பாம்பு.
அங்கை = உள்ளங்கை.
 அனல் = தீ.

 இரவாடும் = ஊழிக்காலத்து இருளில் கூத்தாடும். 


No comments:

Post a Comment