Saturday, June 21, 2014

கங்கையாடிலென் காவிரியாடிலென்....

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
எங்கும் ஈசன்என் னாதவர்க்கு இல்லையே.

ஆடில் என் = தீர்த்தமாடுவதால் என்ன பிரயோசனம்?
கொங்குதண் = மணமுள்ள குளிர்ந்த.
குமரித்துறை = கன்னியாகுமரித்துறை.
ஓங்குமா கடல் = அலைகள் ஓங்குகின்ற பெரியகடல்.
ஓதநீர் = வெள்ளப் பெருக்கான நீர்.

என்னாதவர்க்கு இல்லையே = என்று சொல்லி வணங்காதவர்களுக்குப் பயன் இல்லை.


No comments:

Post a Comment