Thursday, August 14, 2014

நினைவுகள்-29

ஸ்டிரிங் தியரி (String Theory)
இந்த உலகம் எங்கிருந்து வந்தது, நாம் எங்கிருந்து வந்தோம் என்பது இன்னும் கேள்விகளாகவே உள்ளன.  இந்தக் கேள்விகளுக்கெல்லாம், இந்த ஸ்டிரிங் தியரி (ஸ்டிரிங் தத்துவம்) விடை கொடுக்கும்.

அணுக்கள் தான் அடிப்படை என்று ஒருகாலம் நினைத்தோம். பின்னர், அந்த அணுக்களிலுள்ள எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்று பொருள்கள்தான் அடிப்படை என்று நினைப்பை மாற்றிக் கொண்டோம்.

ஆனால், இப்போது இந்த ஸ்டிரிங் தத்துவம் வந்துவிட்டது. இதன்படி வேகமாகச்  சுற்றும் எலெக்ட்ரான்களில் லெப்டான்கள் (leptons) உள்ளன. புரோட்டான், எலெக்ட்ரான் இவைகள் 'குவார்க்' (quarks) என்ற மூலப் பொருள்களால் ஆனது என கண்டறிப்பட்டுள்ளது. இவை தலா ஆறு ஆறு குவார்க்குகளால் ஆனது. (இப்போதைக்கு இந்த குவார்க்குகள் தான் ஆரம்ப, அடிப்படை பொருள் என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.)

இந்த குவார்க்குகளின் கட்டுமானத்தில்தான் அணுவின் புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் உள்ளன. இந்தக் குவார்க்குகள் ஆறுவிதமான 'செங்கல்களைக்' கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்தக் குவார்க்குகளுக்கு ஆறுவித பெயர்களும் உண்டு. UP, Down, Charm, Strange, Bottom and Top. இதில் ஒவ்வொரு புரோட்டானும் இரண்டு மேல் குவார்க்குகளையும் ஒரு கீழ் குவார்க்குகளையும் கொண்டிருக்கும்.

மீதியுள்ள ஆறு குவார்க்குகளும் எலெக்ட்ரானுக்கு சம்மந்தப் பட்டவை. இதை லெப்டான் (leptons)என்கின்றனர். இதில் 2 குவார்க்குகளை "மீயான் (Muon)" என்பர், ஒரு குவார்க்கை "டாவான் (Tauon)" என்பர், மூன்று குவார்க்குகளை "நியூட்ரினோஸ் (Neutrinos)" என்பர்.

எலெக்ட்ரானுக்கு உருவமே இல்லை, வெறும் ஒளிக் கற்றைகளால் ஆனது. அது ஓடிக் கொண்டிருக்கும். எனவே நாம் மைக்ராஸ்கோப் வழியே பார்த்தால், ஒளிக்கோடாகவே தெரியும்.  இந்த ஓட்டம் மேல், கீழ், தெளிவு, தெளிவுகுறைவு, அழுத்தம், உச்சி, ஆழம் இவைகளாகவே ஓடும். எல்லாமே இப்படியான ஓட்டங்கள், ஒளி ஓட்டங்கள். இதைத்தான் ஸ்டிரிங் தியரி அல்லது கயிறு போன்ற ஓளி ஓட்டம் என்பர்.
அப்படிப் பார்த்தால், இந்த பிரபஞ்சம் முழுதுமே இப்படிப்பட்ட ஸ்டிரிங் ஒளிகளால் ஓடிக் கொண்டிருக்கும் பொருள்களால் ஆக்கப்பட்டுள்ளது, அல்லது கட்டப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், இதற்கும் உள்ளே வேறு ஏதாவது மூலப் பொருள் இருக்கிறது என்ற உண்மையை இதைப் படைத்த கடவுள் காட்டிக் கொடுக்கக்கூடும். நமது அடுத்த தலைமுறை இதை அறியும்படி செய்வான் அந்த இறைவன்.

.

No comments:

Post a Comment