Tuesday, October 21, 2014

சதாபிஷேகம்


சதாபிஷேகம்
குழந்தை பிறந்து ‘ஒரு வருடம் முடிந்து’ கொண்டாடுவது முதல் பிறந்தநாள். பிறந்து ஒருவருடம் (Anniversary) முடிந்தது என்பதைக் கொண்டாடுவது. (பிறந்ததைக் கொண்டாடுவது இல்லை.)
எத்தனையாவது பிறந்தநாள் என்பது, எத்தனைவருடங்கள் ‘முடிந்தது’ என்பதைக் குறிக்கும்.
81-வது பிறந்தநாள் என்பது பிறந்து 80 வருடம் முடிந்தது என்பதைக் கொண்டாடுவது. 81st Birthday.
சதாபிஷேகம் என்பது, இவர் பிறந்து 80 வயதாகும்வரை மொத்தம் 1000 பௌர்ணமிகளைப் பார்த்தவர்.
80 வருடங்களில் 80 x 12 =960 ம் 80/2 =40 ஆக 960+40=1000. (வருடத்திற்கு பன்னிரண்டரை பௌர்ணமிகள் வீதம்).
வயதை எட்டு எட்டாக பிரிக்கச் சொன்னதுபோல ஒரு வகை.
இங்கு, இருபது இருபதாகப் பிரித்தால் இந்த 80 வயது 4 பிரிவு.
முதல் இருபது ஒன்றும் அறியாத வயது. கன்றுக்குட்டி பசுமாட்டைச் சுற்றிவருவதுபோல.
இரண்டாவது இருபது, வாழ்க்கையின் எல்லா உண்மையும் விளங்கும் வயது. மனிதனாக இங்கு வந்ததன் ‘உண்மை நோக்கத்தை’ கடவுள் இதில் காட்டியிருப்பான்.
அடுத்த மூன்றாவது இருபது, சிலருக்கு இளைப்பாறும் சொர்க்க வசதி. சிலருக்கு நரக தண்டனை. இதில்தான், கடவுள் ‘கர்ம-வினை தீர்க்கும்’ சொர்க்க நரகத்தின் தீர்ப்பைக் காட்டுவான்.
அடுத்த நான்காவது இருபது, சிலருக்குக் கிடைக்கும். சிலருக்கு கிடைக்காது. நல்ல மக்களைப் பெற்றவர் இந்த இருபதில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வர். சிலர், ‘கடவுள் ஏன் என்னை கூட்டிச் செல்ல வரவில்லை’ என ஏங்குவர்.  இங்கும் கர்வ-வினையின் தீர்ப்பை எழுதி இருக்கிறான். ஒருவேளை, முன் வழக்கில் தப்பித்தவர்களுக்கு இது அப்பீல் கோர்ட்டாக இருக்குமோ?

இதில் விஷேசம் என்னவென்றால்,
80 வயதை தாண்டும்போதும் அவர் இளமையுடன், உடல்நலத்துடன், நல்ல சிந்தனையுடன், தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் வலிவுடன் இருப்பாரேயானால், அவரே இந்த உலகின் அரசன். அந்த வயதில் தன் மனைவியுடன் இருப்பாரேயானால் பேரரசன்.
எனவே அவர் இந்தப் பூவுலகின் பொக்கிஷம்.
அப்படியென்றால், 100 வயதானவர்?
எண்பதை தொரடர்ந்த பயணம்... சுயமாகவே இயங்குபவர் கடவுளின் அருள் பெற்றவர். மற்ற நாடுகளில் இவருக்குத் தனி மரியாதை. இந்தியர்கள் அதன் அருமை தெரியாதவர்கள். இங்கு ‘கிழம்’ என்ற வசை.

இன்று ஒரு சதாபிஷேக தம்பதியரிடம் ஆசி பெற்றவதன் விளைவு.
கட்டுப்பாடானவர்; தனிஒழக்கம் கொண்டவர்; கடவுள் வழிபாட்டுடன், கடவுளை சேவை செய்வதில் தன்னை முழுதாக்கிக் கொண்டவர். சிறந்த சிந்தனைவாதி. எல்லாச் செல்வங்களுடனும் வாழ்பவர்.





No comments:

Post a Comment