Sunday, October 19, 2014

அடிடா நொறுக்குடா...

அடிடா, நொறுக்குடா...
மருத்துவமனைகளில், மருத்துவம் கைகொடுக்காமல் போனாலும், மருத்துவர் கைவிட்டுவிட்டாலும், உயிர் இழப்புகள் ஏற்படுவது இயற்கை. ஆனால், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மருத்துவமனைகளை தாக்குவது இப்போது அதிகமாகியுள்ளது. இதற்கு இரண்டே காரணங்கள்தான். மருத்துவமனைகள், போதுமான உபகரணம், அனுபவமிக்க மருத்துவர்களை, நர்ஸ்களை, உபயோகித்துக் கொள்ளாமல் பணம்பண்ணுவது. மற்றொன்று மருத்துவர் வேண்டுமென்றே அஜாக்கிரையாக இருந்து விட்டார் என்று பாதிக்கப் பட்டவரின் உறவினர் கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சொல்வது.

இதற்கு இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வந்துவிட்டால், இத்தகைய அசம்பாவிதங்கள் இரண்டு பக்கமும் நேராது.

ஸ்காட்லாண்டில் ஒரு வழக்கு:
அந்த நாட்டின் 49 வயது ஆண் நோயாளியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே உடலெல்லாம் நோய். மூளை பாதிப்பு, சர்க்கரை வியாதி, ஹெபட்டிடிஸ்-சி, எபிலெப்சி என்னும் காக்காய்வலிப்பு. பத்து வருடங்களுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். யூரினரி-மூத்திர பாதை அடைப்பு நோய், பத்தாததற்கு நெஞ்சுவலியும் அவ்வப்போது வருமாம். சர்க்கரை வியாதியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லையாம். அதனால், சாப்பாட்டை விழுங்கிச் சாப்பிட முடியாதாம். (he had difficulty in swallowing).

இதனால் இவரின் அடிவயிற்றில் ஒரு அறுவைச்சிகிச்சை செய்து, அதன்வழியாக ஒரு டியூப் விட்டு வயிற்றுக்கு சாப்பாட்டை கொடுக்கலாம் என டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள். இந்த மாதிரி டியூப் போடுவதை Percutaneous Endoscopic Gastrostomy (PEG) என்பர். பெக்-டியூப் வைத்து ஆப்பரேஷனும் செய்யப்பட்டது. லோக்கல் அனஸ்தீசியா மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஒருவாரத்தில் அந்த நோயாளி இறந்து விட்டார். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் அறிக்கையில், பெக்-டியூப் சரியாக பொருந்தியிருக்கவில்லை என்றும், உணவு சிறிது வெளியேறிவிடுகிறது என்றும் அதனால் வயிற்றின் உள்ளே வீக்கம் வந்தது என்றும், பெக்-டியூப் சரியாகப் பொருத்தி இருந்தால், இந்தப் பிரச்சனை இருந்திருக்காது என்றும் சொல்லப்பட்டது.

இறந்தவரின் உறவினர்கள் அங்குள்ள Fatal Accident Act என்னும் மரணம் நேரும் விபத்துச் சட்டப்படி மருத்துவமனைமீது வழக்குப் போடுகிறது. மருத்துவமனையோ, பெக்-டியூப் முறையில் சாப்பாடு கொடுப்பது பொதுவானதுதானே. அந்த மாதத்தில்மட்டும் மொத்தம் 32 நோயாளிக்கு பெக்-டியூப் சாப்பாடுதான் கொடுத்திருக்கிறோம். இதில் அஜாக்கிரதை இல்லை. டியூப் சரியாகவே பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் டியூப்பில் போகும் சாப்பாடு அவரின் வயிற்றில் விழுவதில் பிரச்சனை என்பது உள்ளே நிகழ்ந்துள்ளது.

வழக்கு கோர்ட்டுக்குச் செல்கிறது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைப்படி, (European Convention of Human Rights=ECHR) இந்த வழக்கு விபத்து மரணத்தில் வராது. அந்த ECHR சட்டப்படி மனிதன் உரிமை என்னவென்றால்;
1.      ஒவ்வொரு தனிமனித உயிரும் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது.
2.      கோர்ட் தண்டனை தவிர மற்ற விஷயங்களில் ஒரு மனிதனை தண்டிக்கவோ, இம்சிக்கவோ, யாருக்கும் உரிமையில்லை.

ஆனாலும், இந்த வழக்கில் இறந்த நோயாளி, அவன் இறக்கும்வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளான். அவன் உயிர் போகட்டும் என்று எந்த அஜாக்கிரதையாகவும் யாரும் நடக்கவில்லை. எனவே இங்கு எந்த மனித உரிமை மீறலும் நடக்கவில்லை. அதாவது “நோயாளி, மருத்துவ சிகிச்சையில், கண்காணிப்பில் இருந்ததால், அவர் விபத்து-இறப்பு என்று கருத முடியாது.

“I take it from that it means that the requirement to hold an effective judicial inquiry into the death of a patient in medical care does not arise, in the absence of at least some reasonable possibility of a person responsible for the care of that patient being found in breach of duty.”

என்னதான் அனுபவமிக்க மருத்துவர்களும், காலத்துக்கேற்ற மருத்துவ உபகரணங்களும், புதிய புதிய மருந்துகளும் இருந்தாலும், நோயாளி பிழைப்பது என்பது அவனின் உடற்கூறும், இறைவனின் அருளும் சேர்ந்து நடக்கும் ஒரு கூட்டுச் செயல்.

மருத்துவர்களின் அஜாக்கிரதை இருக்கும் விஷயங்களில் மட்டும், நிவாரணம் கேட்கவும், அப்படி இல்லாத விஷயங்களில், மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் தாக்குவதை தடுக்கவும், நம்மூரிலும் போதுமான, விளக்கமான சட்டங்கள் தேவைப்படுகிறது.





No comments:

Post a Comment