Saturday, October 31, 2015

இந்திராகாந்தியின் அரசியல் வாரிசு பிரியங்காவா?

இந்திராகாந்தியின் அரசியல் வாரிசு பிரியங்காவா?
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு; அவரின் ஒரே மகள் இந்திரா; இவர் பிரதமராக இருந்தபோது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மூத்த மகன் ராஜிவ் பிரதமரானார்; ராஜிவ் 1991ல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விடுதலைப் புலிகளால் வெடிகுண்டு வைத்துக் கொள்ளப்பட்டார்;
இந்திரா இறந்தபோது அவரது பேத்தி பிரயங்காவுக்கு 12 வயதுதான்; இப்போது பிரயங்காவின் வயது 43; 
ஆனால், இந்திராவின் அரசியல் ஆலோசகர் எம்.எல்.பொத்தேதார் கூறுகிறார், "இந்திரா இறப்பதற்கு மூன்று நாட்களுக்குமுன்பு, தனக்குப்பின் தன் பேத்தி பிரியங்காவே பிரதமராகத் தகுதியானவர்" என்று அந்த அம்மையாரே கூறினாராம். இப்போது சொல்கிறார். எவ்வளவுதூரம் இது உண்மை என்று தெரியவில்லை.
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா; இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து ஹரியானா மாநிலத்தில்  .... நிறுவனத்துக்கு நிலம் விற்ற வகையில் முறைகேடு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்; (அதை ஒரு ஐஏஎஸ் அதிகாரி ...... சொல்லி உள்ளார்); குர்கான் நகரில் ராபர்ட் வாத்ராவுக்கு வர்த்தக ரீதியிலான திட்டத்தை செயல்படுத்து லைசென்ஸ் வழங்கப்பட்டதை, அவர் .... நிறுவனத்துக்கு 58 கோடிக்கு விற்றுவிட்டாராம்; இதற்கு வரி செலுத்தவில்லையாம்
ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அவரைப்பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஒரு கூட்டம் உருவாக்கிக் கொண்டே இருக்கும்; அதற்கு நேர் எதிராக, மற்றொரு கூட்டம், எதிர் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்; குறைவான தவறுகள் செய்தவர்களை மக்கள் மனதில் கொள்வது இந்தியர்களின் வாடிக்கையாகும்.
பொதுவாக, இந்தியாவில் அரசியலும், ஊழலும், ஒட்டிப்பிறந்த ரெட்டைக் குழந்தைகளாகவே ஆகிவிட்டன; மிதமிஞ்சிய அதிகாரங்கள் குவிந்து இருக்கும் இடங்களில் ஊழல் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் அதிகமே!  Power tends to corrupt, and absolute power corrupts absolutely. இந்தியாவில் சட்டங்கள் மூலம், இத்தகைய அதிகார மையங்கள் அதிகமாகவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது அதில் மிதமிஞ்சிய அதிகாரங்களைக் குவித்திருக்கலாம். “தானே முதலாளியாகவே இருந்தாலும், தான் ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளாதவரை கட்டுப்பாடு என்பதே இருக்காது” என்பதே இதுவரை உலகம் கண்டுவந்த உண்மையும்கூட. சர்வாதிகார நாடுகள் எல்லாம் அழிந்துவிட்டன; காரணம், அவைகள் மிதமிஞ்சிய அதிகாரத்தை தன் எஜமானுக்குக் கொடுத்துவிட்டன; ஜனநாயக நாடுகள் பல வாழ்கின்றன, சில தத்தளிக்கின்றன; காரணம்; இவைகள் அதிகாரத்தை அளந்து கொடுப்பதில் தவறிவிட்டதே காரணம்;
மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு சுயகட்டுப்பாடு வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் பொருள். அதிகாரம் இல்லை என்றாலும் பதவி என்பது செத்த பாம்பாக ஆகிவிடும்; மிதமிஞ்சிய அதிகாரம் என்பது கயிறு இல்லாத காளையாகிவிடும்;
இந்தியாவில் எப்படிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதை இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்லி உள்ளது. அதை எடுத்துச் செய்பவர்களுக்கு மட்டுமே சுய கட்டுப்பாடு அவசியம்;
இந்திராவின் பேத்தி என்ற முகவுரையுடன் அரசியலுக்கு வரும் பிரியங்காவுக்கு எப்படிப்பட்ட மனநிலை உள்ளது என்பதை அவரே வெளிப்படுத்திய பின்னரே, அவர் இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் கொள்கையை முடிவு செய்யமுடியும்.

**

No comments:

Post a Comment