Saturday, November 21, 2015

பறவைகளுக்கு பறக்கும் சுதந்திரம் வேண்டும்!

விலங்குகளுக்கும் அடிப்படை உரிமை

அடிப்படை உரிமை என்பது Fundamental Right; இதை ஜனநாயகத்தை பின்பற்றும் எல்லா நாடுகளும் அந்த நாட்டு மக்களுக்கு வழங்கி உள்ளன; தனிமனித உரிமைகள் இவைகள்; இது மனிதனுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமா? விலங்குகளுக்கும் இந்த உரிமை கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது;

பறவைகளுக்கும் அடிப்படை உரிமை உண்டு; அதை கூண்டில் அடைத்து வைக்க மனிதனுக்கு உரிமை இல்லை; ஒரு வழக்கில், குஜராத் ஐகோர்ட் இத்தகைய தீர்ப்பை பறவைகளுக்கு வழங்கி உள்ளது; அதை எதிர்த்து அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்தது. வெள்ளிக்கிழமை விசாரனை நடந்த்து; அதில் சுப்ரீம் கோர்ட் தனது முடிவைப் பின்னர் சொல்வதாக சொல்லியுள்ளது.

பறவைகளை கூண்டில் அடைத்துவைப்பது, இறக்கைகளை வெட்டிவிடுவது; இறக்கைகளை செலோ டேப் கொண்டு ஒட்டி விடுவது, காலில் பெரிய வளையம் மாட்டி அவைகளை பறக்கவிடாமல் செய்வது, இப்படிப்பட்ட கொடுமைகளை செய்கிறார்களாம்;

இறைவன் பறவைகளை இயற்கையாக பறந்த திரியவே படைத்துள்ளான்; அதை அடைத்து வைப்பது எந்த வகையில் நியாயம்; அவைகள் உரிமைகள் பாதிக்கப்டுகின்றன என குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு கொடுத்துள்ளது;

இயற்கை கொடுத்த வரத்தை யார் கட்டுப்படுத்தினாலும் அது உரிமை மீறலே!!
________________


No comments:

Post a Comment