Thursday, November 5, 2015

கனடாவின் மூன்று மந்திரிகள் இந்தியர்கள்!

கனடாவின் மூன்று மந்திரிகள் இந்தியர்கள்!
கனடா நாட்டின் மக்கள் சபைக்கு மொத்தம் 338 எம்.பி.க்கள்; இதில், இப்போது நடந்து முடிந்த தேர்தலில், லிபரல் பார்ட்டி 184 எம்.பி. சீட்டுகளை வென்று நேற்று புதன்கிழமை ஆட்சி அமைத்துள்ளது; அதன் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடவ் 23வது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்; அவருடன் 23 மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்; அதில் 13 பேர் பெண் மந்திரிகள்; அதிலும் சிறப்பாக மூன்று மந்திரிகள் டர்பன் என்னும் தலைபாகை கட்டிய பஞ்சாபி சீக்கியர்கள்;
டர்பன் கட்டிய ஹர்ஜித் சஞ்ஞன் என்பவர் இராணுவ மந்திரியாகவும், டர்பன் கட்டாத அமர்ஜீத் ஷோகி என்பவர் Infrastructure என்னும் உள்கட்டமைப்பு மந்திரியாகவும், டர்பன் கட்டிய நவ்தீப் பெயின் என்பவர் Innovation, science and economic development என்னும் புதிய வழிமுறைகள், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி மந்திரியாகவும் புதிய பொறுப்புகளை ஏற்கின்றனர்;
சஞ்ஞனுக்கு 42 வயது; அமர்ஜீத் இந்தியாவில் டிரைவராக இருந்தவர்; நவ்தீர் பெயின் பேராசிரியராக இருக்கிறார்;
**




No comments:

Post a Comment