Sunday, November 22, 2015

சிறு தெய்வத்தின் சொத்து (minor Deity)

சிறுதெய்வம், தன் பெயரில் நிலம் வைத்துக் கொண்டு விவசாயம் பார்க்கலாமா?

கோயில்களில் உள்ள சாமியும் மனிதனைப் போலவே சொத்துக்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்; இதை சட்டம் அங்கீகரிக்கிறது; சாமியும் உயிருள்ள மனிதனைப் போலவே "living person" என்றே சட்டம கருதுகிறது; எனவேதான் எல்லாக் கோயில்களிலும் உள்ள சாமிகள் பெயரில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன; வங்கிக் கணக்குகள் இருக்கின்றன; ஆபரணங்கள் இருக்கின்றன; 

ஆனால் இப்போது புதுமையாக ஒரு பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் அணுகி உள்ளது!

ஒரு கோவிலில் பெரிய சாமி இருக்கும்; அதுதான் தலைமை கடவுள்; அந்த கோவில் அந்த சாமிக்காக ஏற்பட்டது; ஆனாலும் அந்த கோவிலில் துணை கடவுள்கள் இருப்பார்கள்; இவர்களுக்கு சொத்து எதுவும் இருக்காது; பெரிய கடவுளுக்கு கிடைக்கும் வருமானத்தில், இந்த சின்ன கடவுளுக்கும் பூஜைகள் நடக்கும் அவ்வளவே!

இந்த சின்ன கடவுள்கள் சொத்து ஏதும் வாங்கமுடியுமா? அதன் பெயரில் சொத்துக்களை வைத்திருக்க முடியுமா? என்ற கேள்விகள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் எழுப்பப் பட்டது;

ஏற்கனவே அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த ராமர் கோயில் வழக்கில், சிறு தேவதைகள் பெயரில் (Minor Deity) மூன்றில் ஒரு பங்கு உரிமை உள்ளதை கோர்ட் அங்கீகரித்துள்ளது; 

ஆனால் ராஜஸ்தான் ஐகோர்ட் ஒரு வழக்கில், இந்த சின்ன தெய்வங்கள் பெயரில் இருந்த விவசாய நிலங்களை அது வைத்து பயிர் செய்ய முடியாது; நிலங்களை வைத்திருக்க அந்த சிறு தெய்வங்களுக்கு உரிமை இல்லை என்றும் அதை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறியது;  

இப்போது இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துவிட்டது; 

அந்த ராஜஸ்தான் வழக்கில் உள்ள நிலத்தை அந்த சிறு தெய்வத்துக்கு பூஜை செய்யும் பூஜாரி விவசாயம் செய்து வருகிறார்; அதில் வரும் வரும்படியைக் கொண்டு பூஜை செய்கிறாராம்;

சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்று தெரியவில்லை;
பொறுத்திருப்போம்;
**

No comments:

Post a Comment