Saturday, January 16, 2016

திருமகளே, நீ வரம் தர மாட்டாயா?

மாதவாச்சாரியாரின் "சங்கரவிலாசம்"
துங்க பத்திரை நதிக்கு அருகில் பம்பை என்னும் கிராமம்; மாதவாச்சாரியார் என்பவர் ஏழை; இவர் வறிய குடும்பத்தில் பிறந்ததால்இளமையிலேயே செல்வந்தவர் ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டார்; அதே பேரவாவுடன் கல்வி கற்று வந்தார்; தமது எண்ணம் விரைவில் கைகூடாது என்று நினைத்திருப்பார் போலும்!
திருமகளையும், கலைமகளையும் நினைத்து கடும் தவம் புரியப் புறப்பட்டு விட்டார்; காட்டுக்கு போகிறார்; அங்கு கடும் தவத்தில் இருக்கிறார்;
காட்டில் ஒருநாள், அரசனுக்குறிய மாடுகளை மேய்த்துக் கொண்டு திரியும், "புக்கணன்" என்னும் சத்திரியன் திரிகிறான்; அவன், இவரிடம் வருகிறான்: அந்த மாடு மேய்க்கும் புக்கணனிடம், தவத்தில் இருக்கும் இவர் தன் சாப்பாட்டு கஷ்டங்களை கூறுகிறார்: அவர் மீது இரக்கம் கொண்ட மாடு மேய்ப்பவன், "தினமும் நான் உங்களுக்கு பசும்பால் தருகிறேன்" என்று உறுதி கூறுகிறான்; ஆனால், அவரோ, "அரசனின் பசுவின் பாலை திருடித் தருவது துரோகம் இல்லையா" எனக் கேட்கிறார்:
அவனோ, "தேவைக்கு அதிகமாக உள்ள பாலைத்தான் உம்மைப் போன்ற ஒரு தவ முனிக்கு கொடுப்பது புண்ணியமே தவிர, பாவம் இல்லை" என்று பதில் சொல்கிறான்; அவரும் உடன்படுகிறார்; தினமும் பசும்பால் கொடுத்து விட்டுச் செல்கிறான்; முனிவரின் வயிற்றுப் பிரச்சனை தீர்கிறது;
ஒருநாள், அந்த மாடுமேய்க்கும் புக்கணனுக்கு முன்னர், திருமகளும், கலைமகளும் நேரில் தோன்றினர்; "நீ பால் கொடுக்கும், உன் முனிவரான மாதவருக்கு, இந்தப் பிறவில் அவர் செல்வந்தர் ஆகும் எண்ணம் நிறைவேறாது" என்று கூறி மறைகின்றனர்; அவனும் அதை முனிவர் மாதவருக்கு சொல்கிறான்; அவன் பேச்சைக் கேட்காமல், மாதவர் இன்னும் கடும் தவத்தில் இருக்கிறார்; ஒன்றும் நடக்கவில்லை;
ஒருநாள், மாதவர் கோபத்தில், தான் அணிந்திருந்த பூணூலை கழிற்றி எறிகிறார்: அன்று முதல் சந்நியாசி ஆகிவிட்டார்; இதைக் கண்ட திருமகளும் கலைமகளும் அவரின் முன்னர் தோன்றி, "இனி நீ வேண்டுவதைக் கேள்; நாங்கள் கொடுக்கிறோம்" என்று சொல்கிறார்கள்;
ஆனால் கோபத்தில் இருந்த மாதவர், "எனக்கு கலைமகள் அருளே போதும்! திருமகள் ஏதாவது எனக்கு கொடுப்பதாக இருந்தால், அதை எனக்கு உதவி செய்த மாட்டுக்கார புக்கணனுக்கு கொடு" என்று கூறுகிறார்: அவ்வாறு கலைமகள் அருள் மாதவருக்கும்; திருமகள் அருள் மாட்டுக்கார புக்கணனுக்கும் கிடைக்கிறது;
சில நாட்களில், ஹஸ்தினாபுர நாட்டின் அரசன் இறக்கிறான்; அடுத்த வாரிசு இல்லை; அக்கால வழக்கப்படி, யானையை அலங்கரித்து அதன் துதிக்கையில் ஒரு மாலையைக் கொடுத்த அனுப்புகின்றனர்; அந்த யானை, யாருக்கு மாலை இடுகிறதோ, அவரே அடுத்த அரசன் என்பது நியதி;
அதற்கு ஏற்பாடுகள் செய்தனர்; யானை பல இடங்களில் திரிந்து, மாடுமேய்க்கும் புக்கணன் இருக்கும் காட்டுப்பகுதிக்கு வந்து புக்கணனுக்கு அந்த மாலையை இட்டு அவனை அதன்மீது ஏற்றிக் கொண்டு அரண்மனைக்கு வருகிறது; அங்கு புக்கணன் ஹஸ்தினாபுத்து நாட்டுக்கு அரசன் ஆகிவிட்டான்;
அவனைப் பார்க்க ஒருநாள், மாதவர் வருகிறார்; இதைத் தெரிந்த புக்கணன் அவரை அன்புடன் வரவேற்று தன்னுடனேயே வைத்துக் கொள்கிறான்;
கலைமகள் அருள் பெற்ற மாதவர், நூல்கள் பல இயற்றுகிறார்; இவர் இயற்றிய நூல்கள் பல; அவற்றில் "சங்கரவிலாசம்" என்பது 40,000 ஸ்லோகங்களைக் கொண்டது; அதற்குபின் மாதவர் என்ற பெயர் மாதவாச்சாரியார் என்றும் வித்தியாரண்ணியர் என்றும் வழங்கப்பட்டது;
 **



No comments:

Post a Comment