Wednesday, May 4, 2016

சண்முக கவசம்

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”
அண்டமாய் அவனி யாகி அறியொணாப்
பொருள தாகிப் தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற
என்னருள் ஈசனான திண்திறல் சரவணத்தான்
தினமுமென் சிரசைக் காக்க!

ஆதியாங் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தானிரு நுதலைக் காக்க
சோதியாத் தணிகை ஈசன்
துரிசிலா விழியைக் காக்க
நாதனாங் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க
இருசெவி களையுஞ் செவ்வேள்
இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல்
முழுதுநற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னை
சிவசுப்ர மணியன் காக்க

....

No comments:

Post a Comment