Friday, October 28, 2016

கந்தரலங்காரம்-4

கந்தரலங்காரம்-4

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டுத் தாள்
சேர ஒட்டார், ஐவர் செய்வது என் யான், சென்று  தேவர் உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரிக் கக்கக்
கூர கட்டாரி இட்டு இமைப் பொழுதினில் கொன்றவனே!

(ஓர ஒட்டார் = ஒன்றை ஆராய விட மாட்டார்; உன்ன ஒட்டார்  = ஒன்றை எண்ண விட மாட்டார்; மலர் இட்டு உனது திருவடியைச் சேர விடமாட்டார்; ஐவர் என்னும் ஐம்புலன்களாகிய பகைவர்கள் இப்படி என்னை துன்பப் படுத்துகிறார்கள்; அடியேன் என்ன செய்வது? தேவர்கள் பிழைப்பதற்காக, சேர நிட்டூரச் சூரன் என்னும் கள்வனும் கொடியவனுமாகிய சூரன் என்பவனை, அவனின் கார் உடல் என்னும் கரிய உடலை, ரத்தம் கக்கும்படி (சோரி கக்க), கூரிய உன் வேல் கொண்டு, ஒரு இமைப் பொழுதினில் கொன்றவனே முருகா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-4)

**

No comments:

Post a Comment