Friday, October 28, 2016

கந்தரலங்காரம்-5

கந்தரலங்காரம்-5

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை திரு முலைப் பாலை
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே!

(புவனங்கள் என்னும் இந்த பிரபஞ்சம் உய்யும்படி அவைகளைத் தோற்றுவித்த பொற்பாவை போன்ற உமாதேவியின் திருமுலைப் பாலை அருந்தி, சரவணப் பொய்கையில் பூந்தொட்டிலில் குழந்தையாகக் கிடந்து, கார்த்திகைப் பெண்கள் என்னும் ஆறு பெண்களின் பால் உண்ண விரும்பி, கடல் அழ, குன்று அழ, சூரன் கலங்கி அழ, குருந்தை என்னும் பச்சிளம் குழந்தையாக விம்மி அழும் குறிஞ்சிக் கிழவன் என்று உலகம் (குவலயம்) துதிபாடும்  மலைநாட்டுக் கிழவனே கந்தா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-5)

**

No comments:

Post a Comment