Friday, October 7, 2016

Juan Manuel Santos

Juan Manuel Santos

2016-ன் அமைதிக்கான நோபல் பரிசு சுவான் மனுவேல் சந்தோஷ்-க்கு கொடுக்கப் பட்டுள்ளது; வாழ்த்துக்கள்!

ஆல்பர்ட் நோபல் அவர்கள் இந்த நோபல் பரிசை ஏற்படுத்தி வைத்துள்ளார்; மொத்தம் ஐந்து துறைக்கான நோபல் பரிசுகள் கொடுக்கப்படுகிறது;

அதில் ஒன்றுதான் “அமைதிக்கான நோபல் பரிசு”; இது இருநாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவது; போர்ப்படைகளை குறைத்துக் கொள்ள வழிகாண்பது, போன்ற அமைதி சேவைகளுக்கு வழங்கப்படுகிறது;

கொலம்பியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அல்லது கலவரத்தில் சுமார் 2,20,000 பேர்கள் கொல்லப் பட்டனர்; 60 லட்சம் பேர் இருப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டனர்; இந்த உள்நாட்டுக் கலவரங்கள் சுமார் 52 வருடங்களாக நடந்து வருகிறது:
இந்த சுவான் மனுவேல் சந்தோஷ் என்னும் கொலம்பியா நாட்டு அதிபர், உள்நாட்டு எதிர் கோஷ்டியிடம் பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார்; மக்கள் ஓட்டெடுப்புக்கும் விடப்பட்டது; அதில் சந்தோஷ் வகையறாவுக்கு 50%க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன; தோல்விதான்!

இருந்தும், சந்தோஷின் இந்த அமைதி முயற்சிக்கு இந்த நோபல் பரிசு கொடுத்துள்ளதாக நார்வே நோபல் கமிட்டி சொல்லி உள்ளது:

கொலம்பிய மக்களின் பொறுமைக்கு கிடைத்த பரிசு எனலாம்; 50 வருட தொடர் கலவரங்கள்: மக்களின் உயிர் போய் இருக்கிறது; நிம்மதி இல்லை; இருந்தபோதிலும் அமைதிக்கான பேச்சு தொடர்கிறது; அதற்கு அதிபர் சந்தோஷ் உறுதுணையாக உள்ளார்;  கொலம்பியன் அரசாங்கத்துக்கும் பார்க் என்னும் கொரில்லா கூட்டத்துக்கும் உள்நாட்டுக் கலவரம்; பேச்சு வார்த்தை வேண்டாம் என்று 50%க்கும் மேலான (சுமார் 13 மில்லியன் பேர்) ஓட்டளித்துள்ளனர்; இது அதிபர் சந்தோஷூக்கு வருத்தமாக இருந்தாலும், அவரின் விடாத அமைதிப் பேச்சுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகின்றனர், நோபல் கமிட்டி உறுப்பினர்கள்;


இந்த கொலம்பியன் மக்கள் நிம்மதியாக வாழ இறைவனை பிராத்திப்போம்!

No comments:

Post a Comment