Tuesday, November 1, 2016

கந்தரலங்காரம்-10

கந்தரலங்காரம்-10

சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல எனை விட்டவா! இகல்வேலன் நல்ல
கொல்லியைச் சேர்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைக் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!

(சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து, சும்மா இருக்கும் எல்லை என்னும் மௌனத்தின் எல்லைக்குள் என்னை செல்ல விட்டவனே! வலிமையான வேலாயுதத்தை உடைய வேலவனே! நல்ல கொல்லி என்னும் பண் (பாடலை) இசைப்பதால் வரும் இனிய மொழியாளாகிய, கல் மலையில் இருக்கும் கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய கொடி போன்றவளைப் புணருகின்ற மலை போன்ற தோள்களை உடைய எங்கள் முருகப் பெருமானின் வல்லமைதான்!

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-10)


No comments:

Post a Comment