Tuesday, November 1, 2016

கந்தரலங்காரம்-12

கந்தரலங்காரம் -12

படைபட்ட வேலவன் பால் வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதி கிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுப்படலம்
இடைபட்ட குன்றழ மாமேரு வெற்பும் இடிபட்டவே!

(படைபட்ட  = படை பொருந்திய வேலன் பால் வந்த, வாகைப் பதாகை என்னும் வெற்றிக் கொடியாகிய, தடைபட்ட சேவல் = வேலனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சேவல், அதன் சிறகை அடித்துக் கொள்வதால், சலதி என்னும் கடல் பிரிந்து உடைந்தது; அண்ட கடாகம் உதிர்ந்தது; உடுபடலம்  என்னும் நட்சத்திர கூட்டத்தின் அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி மோதிக் கொண்டன; குன்றமும், மாமேரு மலையும் ஒன்றுடன் ஒன்று இடிபட்டன;


(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-12)

No comments:

Post a Comment