Tuesday, March 7, 2017

First Past The Post

“First Past The Post”
குதிரை ரேஸில் ஓடிவரும் குதிரைகளில் எது முதலில் கடைசி கோட்டில் தன் மூக்கை நீட்டுகிறதோ அதுவே வென்றதாக அர்த்தம்; இதைத்தான்  “first past the post” என்கிறார்கள்;
இதைத்தான் மக்களாட்சியில் தேர்தலில் நின்று வென்றவர்களுக்கும் பொதுவான விதியாக வைத்துள்ளனர்; ஒரு தேர்தலில் பலர் போட்டியிட்டாலும், அதில் யார் எல்லோரையும் விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்;
இங்கு வெற்றிக்கு இவ்வளவு வாக்குகள் வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது; சில நாடுகளில் 50% க்கு மேல் வாக்குகள் பெற்ற ஒருவரே வெற்றி பெற்றவர் என்ற விதி உள்ளது; பாதிக்கு மேல் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் வெற்றி பெறுகிறார்;
இந்தியாவில், first past the post  முறையே அமலில் உள்ளது; இங்கு 30% 40% வாக்குகள் பெற்றாலே வெற்றி பெற முடியும். தேர்தல் விதிமுறைகளுக்கு இது இலகுவாக இருப்பதால் பல நாடுகள் இந்த முறையிலேயே வெற்றியை நிர்ணயிக்கின்றன;
இந்த first past the post  (FPTP) முறையில் பல வேட்பாளர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே நாம் வாக்களிக்க முடியும்; இந்த முறையில்தான் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற காலனி நாடுகளில் தேர்தல் நடக்கின்றன;
அமெரிக்க பொதுதேர்தல் இந்த FPTP முறையில்தான் நடக்கின்றன; ஆனால் ஒருசில மாநிலங்களில் மாநிலத் தேர்தலில் இரட்டை ஓட்டு முறையும் உள்ளது; முதல் ஓட்டு ஒருவருக்கும், இரண்டாவது ஓட்டு ஒருவருக்கும் போட வேண்டும்; வேட்பாளர் முதல் ஓட்டுகளில் வெற்றி பெற முடியாவிட்டால், இரண்டாவது ஓட்டுக்களில் எண்ணிக்கையில் கணக்கை எடுத்து வெற்றியை அறிவிப்பர்; இதில் இரண்டாவது ஓட்டுக்களைப் பெற்றவர்கூட வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உண்டு;
இந்த FPTP முறையை ‘ஒற்றைப் பெருவாரி முறை’ என்பர்; ஒரே ஓட்டுத்தான் போட முடியும்; அதில் அதிக ஓட்டுக்களை பெற்றவர் வெற்றிபெறுவார் என்பது இதன் பொருள்;
இந்த FPTP முறையில் தேர்தல் நடத்த எளிமையானது என்பதால் இந்தியாவில் இதைப் பின்பற்றுகிறோம்; படிக்காவதர் அதிகம் இருப்பதால் இது சௌகரிகமாக இருக்கிறதாம்; இரட்டை ஓட்டு முறையில், இரண்டு ஓட்டுப் போட வேண்டும் என்பதால், இது எளிதாக இல்லை என்றும், ஓட்டு எண்ணிக்கையும் காலதாமதம் ஆகும் எனக் கூறுகின்றனர்; குறிப்பிட்ட சதவிகித ஓட்டுகளைப் பெறவேண்டும் என்ற கட்டாய முறையில், யாரையும் தேர்ந்தெடுக்க முடியாமலும் போய்விடக் கூடும் என்பதால், அதுவும் சிரமமான முறை;


No comments:

Post a Comment