Tuesday, March 7, 2017

It is not how to cast your vote...

It’s not how you cast your vote, but how you vote your caste.”
இந்தியாவில் உத்திரபிரதேசம் என்பதே மிகப் பெரிய மாநிலம்; இங்கு 220 மில்லியன் மக்கள் வாழ்கிறார்களாம்! இப்போது இங்கு மாநில தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது; ஒரே நேரத்தில் இங்கு தேர்தல் நடத்துவதில் சிரமம் இருப்பதாகக் கருதி, ஏழு பிரிவாகப் பிரித்து ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது; உத்திரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஆரம்பித்து, ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து, இப்போது கடைசிக் கட்டமான ஏழாவது கட்டத் தேர்தல் உ.பி.யின் கிழக்குப் பகுதியான வாரணாசியில் மார்ச் 8-ம் தேதி நடக்க உள்ளது; இத்துடன் அந்த மாநிலத்தின் மொத்த தேர்தல் நிகழ்வுகளும் முடிந்துவிடும்;
அதன்பின்னர், வாக்கு எண்ணிக்கை மார்ச் 11-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்;
இங்கு பொதுவாக ஜாதிகள் அடிப்படையில் ஓட்டுக்கள் பிரியும் என்றே கணிக்கிறார்கள்; பிற்படுத்தப்பட்ட யாதவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், முஸ்லீம்கள் போன்ற ஜாதியினர் அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது;
ஏற்கனவே அகிலேஷ் யாதவ் அங்கு முதன்மந்திரியாக இருக்கிறார்; இவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்; இவர் அவரின் தந்தை கட்சியான சமாஜ்வாடி கட்சியின்கீழ் ஆட்சி செய்கிறார்; இந்த கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது; மற்றும், ஏற்கனவே முதன் மந்திரியாக இருந்த மாயாவதி அம்மையார் பி.எஸ்.பி. கட்சியில் தேர்தலைச் சந்திக்கிறார்; இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மற்றும், பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற எம்.பி.க்கு இங்கு வாரணாசியில்தான் நின்று வெற்றி பெற்றார்; ஆக நான்கு பெரும் கட்சிகள், மூன்று பெரும் போட்டியாளர்காளக இருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார்கள்;
இங்கு ஜாதி அரசியல் அதிகம் இருக்குமாம்! அதனால்தான், ஓட்டு யாருக்கு போடலாம் என்பதைக் காட்டிலும், ஓட்டை எப்படி நம் ஜாதிக்காரனுக்கு போடவேண்டும் என்றே அரசியல் நடக்குமாம்!
மார்ச் 8-ம் தேதியுடன் கடைசிக் கட்ட தேர்தல் முடிகிறது;
அதனால்தான், பிரதமர் மோடி, வாரணாசி சென்று தேர்தல் பிரச்சாரத்தை நேற்று வேகமாக நடத்தி முடித்திருக்கிறார்; இவர் யாதவர்களைக் கவர வேண்டும் என்று கருதியே, வாரணாயில் உள்ள “கார்வா கோட்டை ஆசிரமத்துக்கு” சென்று அங்குள்ள குருமாரிடம் ஆசி பெற்றுள்ளார்; இந்த கார்வா கோட்டை ஆசிரமத்துக்கு, தலைமுறை தலைமுறையாக ஒரு யாதவர்தான் தலைமை குருவாக இருப்பாராம்! அவரிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றிருப்பது யாதவர்களைக் கவர்வதற்காக என்றும் சொல்லப்படுகிறது; கார்வா கோட்டை ஆசிரமம் வாரணாசியில் கங்கைகரையில் அமைந்துள்ளது;

**

No comments:

Post a Comment